மௌனம்

Posted in kavithay அடையாளங்களுடன் on ஜூலை 21, 2008 by vinoth S

 

நீ என்னுடன் பேசிச்சென்றதை,
ஒட்டுக்கேட்டு விட்டு அதை சத்தமாய்
சொல்லிக்கொண்டிருக்கிறது – காலி வகுப்பறை..!

காரணம் நீ..!

Posted in kavithay on ஜூலை 21, 2008 by vinoth S

கர்வத்துடன் ஊர் சுற்றிக் கொண்டிருகிறது
மாநகரப் பேருந்து – காலை அதில் நீ
கல்லூரிக்குச் சென்றதால்..!

நேரம்

Posted in kavithay அடையாளங்களுடன் on ஜூலை 17, 2008 by vinoth S


உன்னிடத்தில் சொல்லக் கூட
நேரம் இல்லாமல் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறதாம் என் காதல்..!

எனக்குள் உன் பதிவுகள்

Posted in kavithay அடையாளங்களுடன் on ஜூலை 17, 2008 by vinoth S

நீ  என்னோடு இருந்த தருணங்களைவிட
அந்த தருணங்களின் நினைவுகள்தான்
உன்னை அதிகம் காதலிக்க செய்தது..!

 

காதல் நொடி

Posted in kavithay அடையாளங்களுடன் on ஜூலை 17, 2008 by vinoth S


மற்றவர்களை போல் எனக்கும் சாதாரணாமாய்த்தான்
இருந்தது நீயும், என் உலகமும் – உன்மேல்
காதல் வந்த நொடிக்கு முன்வரை..!

கல்லறை பூக்கள்

Posted in kavithay அடையாளங்களுடன் on ஜூலை 17, 2008 by vinoth S


எனக்கு காதல் கொடுத்ததால்,
என் கல்லறைமேல் பூக்கும்
பூக்கள் கூட உனக்குத்தான் சொந்தம்..!

“நீ” என்னும் அழகு

Posted in kavithay அடையாளங்களுடன் on ஜூலை 17, 2008 by vinoth S

என் எல்லா கவிதைகளும் அழகில்லை
என்றாலும் - அதற்கு காரணமான
நீ எப்போதும் அழகுதான்..!

இது உனக்கான இடம்

Posted in kavithay அடையாளங்களுடன் on ஜூலை 17, 2008 by vinoth S

இதை நீ படிக்கும் நொடியில் நான்
எங்கு இருப்பேன் என்றறியாவிட்டாலும்,
நிச்சயமாய் ஒன்று மட்டும்,
இப்பொழுதுகூட நீ என் இதயத்தில்தான் இருக்கிறாய்..!

தனிமை

Posted in kavithay அடையாளங்களுடன் on ஜூலை 17, 2008 by vinoth S


காதலே, சீக்கிரம் வந்தென்னை எடுத்துக்கொள்,
இல்லையென்றால் உனக்கான என் இரவுகளை,
இந்த தனிமையே தின்று தீர்த்துவிடும்..!

காதல் சேமிப்பகம்

Posted in kavithay அடையாளங்களுடன் on ஜூலை 17, 2008 by vinoth S


என் காதலை அடிக்கடி கவிதையாக
வெளியில் கொட்டிவிடுகிறேன்.
அப்போதுதானே நீ கொடுக்கும் காதலை சேமிக்க
என் இதயத்தில் இடமிருக்கும்..!

உனக்காக…

Posted in kavithay அடையாளங்களுடன் on ஜூலை 17, 2008 by vinoth S

எனக்கு மட்டும்தான் தெரியும்
உன் வீட்டு செடியில் உனக்காக பூக்கள் ,
இன்னும் கொஞ்சம் அழகாய் பிறப்பது..!

அர்த்தம்

Posted in kavithay அடையாளங்களுடன் on ஜூலை 17, 2008 by vinoth S

காதல், அழகு, கவிதை
இவை வெறும் வார்த்தைகளாகவே போயிருக்கும் எனக்கு
நீ மட்டும் என்னை காதலித்திருக்காவிட்டால்..!

காதல் பாவம்

Posted in kavithay அடையாளங்களுடன் on ஜூலை 17, 2008 by vinoth S

இப்பொழுதே என்னை காதலித்துவிடு,
இல்லையென்றால் அடுத்த ஜென்மத்தில்,
இதற்கும் சேர்த்து நிறைய காதலிக்க வேண்டியிருக்கும்..!

முதல் காதல்

Posted in kavithay அடையாளங்களுடன் on ஜூலை 16, 2008 by vinoth S

பழைய பள்ளிக்கூட புகைப்படத்தில்,
இன்னும் புதிதாகவே இருக்கிறது

முதல் காதலின் நினைவு..!

மழைத்துளி

Posted in kavithay அடையாளங்களுடன் on ஜூலை 16, 2008 by vinoth S

மழை நின்ற பின் இலையிலிருக்கும்,
துளியைப் போல், நீ பிரியும் பொழுதுகளில்
என் இதயத்தில் இருக்கிறது - உன் இருப்பு..!

நட்பின் சுவடுகள்

Posted in kavithay அடையாளங்களுடன் on ஜூலை 16, 2008 by vinoth S

நாம் கொண்ட லட்சியங்கள் தோற்றிருக்கலாம்,
பிரிந்தபோது எழுதிய முகவரிகள் மாறியிருக்கலாம்,
கனவுகள் பகிர்ந்தித்தளித்த நண்பர்முகம் மறந்திருக்கலாம்,
காலத்தின் பிணைக்கைதியாய் காதலை கடந்திருக்கலாம்,
உலகில் புதிதாய் பல உறவுகள் கிடைத்திருக்கலாம்,
எங்கு வாழ்கிறோமென்று ஒருவருக்கொருவர் அறியாமலிருக்கலாம்,
அனுபவங்கள் கடந்ததால், வாழ்வின் அர்த்தம் புரிந்திருக்கலாம்,
ஆனால் கல்லூரி நினைவுகள் கொடுத்துச் சென்ற  ,
நட்பெனும் தழும்பு மட்டும் என் நெஞ்சில் அப்படியே..!

மௌன அஞ்சலி

Posted in kavithay on ஜூலை 15, 2008 by vinoth S

எழுதத் தொடங்கி பாதியிலேயே 
நின்று போன கவிதைகளுக்காக,
மௌன அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறது - என் பேனா..!

நீ..!

Posted in kavithay on ஜூன் 23, 2008 by vinoth S

நீ..!

கடவுள் பூமிக்குத் தந்த
காதல் பரிசு,
“ நீ..!”

தொலைக்கப்பட்ட காதல் ..

Posted in kavithay on ஜூன் 23, 2008 by vinoth S

Love 

கல்லூரி விடுமுறையில் - வகுப்றை 

முழுதும் நிறைந்து கிடக்கிறது,

படித்தவர்கள் தொலைத்துச் சென்ற காதல்..!

காதல்

Posted in kavithay on ஜூன் 19, 2008 by vinoth S

காதல்

 

காதல் மிகவும் அழகென்கிறாய்,
உனக்கு வந்தால் கோபம் கூடத்தான்
அழகாய் இருக்கிறது..!